Saturday, May 14, 2011

மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி!!

May 14, இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை விட 15,849 ஓட்டுக்கள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார்.

மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ், உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். பி.ஏ(சி.எஸ்) பட்ட படிப்பு படித்தவர்.

0 comments:

Post a Comment