Friday, May 13, 2011

மலேகான் குண்டு வெடிப்பும்! ஹிந்துதுவாவும்!!

மும்பை: 2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ)யிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் காலதாமதமாவதாக புகார் எழுந்துள்ளது.

வழக்கை கையாள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தை உருவாக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை மந்தநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுத்தொடர்பாக அரசு அறிவிக்கையை வெளியிடாததால் விசாரணை நடவடிக்கைகள் துவங்கவில்லை.

2-அது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், உள்ளிட்ட 11 ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கோடு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட வழக்குகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கிறது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலடைக்கப் பட்டுள்ள ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அக்குண்டு வெடிப்பையும் நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் என்பது தெரியவந்தது.

இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கும் முஸ்லிம்களை நோக்கி திரும்பிய வேளையில் நேர்மையான ஏ.டி.எஸ் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்காரேயின் நீதியான விசாரணையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது அபினவ்பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு என்ற உண்மை வெட்டவெளிச்சமானது. ஆனால், கர்காரே மும்பைத்தாக்குதல் வேளையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

0 comments:

Post a Comment