Wednesday, May 18, 2011

மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!

May 18, மாலை மலர் ஹிந்துதுவாவின் அதிகாரபூர்வமான நாளேடாக செயல்பட்டு வருகிறது. இதில் வரும் செய்திகள் பெரும்பான்மையாக உண்மையாக இருப்பதில்லை.

இது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடும் அனைத்து செய்திகளும் பொய்களே.

குறிப்பாக தலைப்பு செய்தியாக வெளிவரும் செய்திகளின் தலைப்புகளும், அதன் செய்திகளில் பரபரப்பு செய்கிறோம் பேர்வழி என்று பொய்யையும், புரட்டையும் கலந்து வடித்திருபார்கள்.

அது மட்டுமல்லாது சிறுபான்மையர் எதிர்ப்பு சிந்தனையில் ஊறி தலைத்தவர்கள். மேலும் தங்களது பார்பன வர்ணாசிரம கொள்கைகளை உரமிட்டு வளப்பவர்கள்.

அந்த அடிப்படையில் சமிபத்தில் இவர்கள் எப்படி? தங்கள் ஹிந்துத்துவா கட்ச்சியான பாரதிய ஜனதாவுக்கு பொய்சொல்லி பலம் சேர்க்கும் ஈன காரியத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பாருங்கள்.

5 தொகுதிகளில் பா.ஜனதா ஓட்டை பிரித்ததால் காங்கிரசுக்கு வெற்றி என்று மாலைமலர் வலைதளத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தே.மு.தி.க. வேட்பாளர் 8 ஆயிரத்து 779 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இங்கு பாரதீய ஜனதா 3-வது இடத்தை பிடித்தது. அந்த கட்சி வேட்பாளர் வாங்கிய ஓட்டு 10 ஆயிரத்து 164. இங்கு பா.ஜனதா போட்டியிடாமல் இருந்திருந்தால் ஓட்டுகள் பிரியாமல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு கிடைத்திருக்கும்.

இங்கு மூன்றாம் இடத்திற்கு பாரதிய ஜனதா வரவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால், யார்? மூன்றாம் இடத்தை பிடித்தார்கள் என்று பார்த்தால் ARM யோகானந்தம்.
இவர் சுயேட்சையாக சட்டை சின்னத்தில் நின்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இவர் பெற்ற வாக்குகள் 22066 ஆகும்.

4வது இடத்தில் வந்த பாரதிய ஜனதாவை 3வது இடத்துக்கு கொண்டு வந்து பாரதிய ஜனதா தமிழகத்தில் ஒரு பெரும் அரசியல் சக்தி என்று காட்ட முனைவது உண்மைக்கு புறம்பான கேடுகெட்ட செய்தி. மாலை மலர் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு பத்திரிகை விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்த வேண்டுமா.

பத்திரிகை என்பது நேர்மை, உண்மை, சத்தியம் என்பதனை கொண்டு நியாத்தின் குரலாக அநீதிகளுக்கு எதிராக இருக்க வேண்டும். இப்படி ஒரு தொழில் செய்து பிழைப்பதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாமே!! இனி பிச்சை எடுத்து பிழைக்குமா மாலை மலர்!!

0 comments:

Post a Comment