Saturday, May 21, 2011

தமிழக முதல்வருக்கு பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை!!

May 21, மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் ஜெயலலிதா அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இதன் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாற்றத்தை விரும்பியே தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள். மாற்றத்திற்கு வித்திடும் வகையில் மே 16 அன்று முதல்வராக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகளும் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

மேலும் மின்சார தட்டுப்பாட்டினை சீர் செய்வது, வீடு கட்டுவதற்கு பண உதவி, நகரும் மருத்துவமனை போன்ற நிறை வேற்றப்படவிருக்கும் பல்வேறு வாக்குறுதிகளும் வரவேற்க தக்கவையாக உள்ளன.

சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டினை 5 சதவீதமாக உயர்த்தும் வாக்குறுதியினை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென இந்த தருணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் திட்டங்களை வகுத்து அதை சீராக நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு முனைய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது

0 comments:

Post a Comment