Tuesday, May 24, 2011

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் :10 போலீசார் பலி


ராய்ப்பூர் : சட்டீஸ்கர் மாநிலம் மகா - சமுந்த் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த 10 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் - ஒரிசா எல்லையில் இருக்கிறது சுனாபேடா வனப்பகுதி. இப்பகுதியில் கூடுதல் எஸ்.பி., தலைமையிலான 10 போலீசார் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் சுற்றி வளைக்கப்பட்டனர். கூடுதல் எஸ்.பி., தலைமையிலான 10 போலீசாரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.

0 comments:

Post a Comment