Wednesday, May 11, 2011

பாபர் மஸ்ஜித் நில உரிமை கோரும் வழக்கின் தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை பாப்புலர் பிரன்ட் வரவேற்கிறது


MAY. 11 இடிக்கப்பட்ட பள்ளிவாசல் நிலத்தை மூன்றாக பிரித்து கொடுக்க சொல்லும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா வரவேற்கிறது .
உச்சநீதிமன்ற பெஞ்ச், உயர்நீதிமன்ற தீர்ப்பை விநோதமானது என்று விமர்சித்ததோடு வழக்கை மறுபடியும் அது விசாரிக்க விருக்கிறது. வகுப்புவாத காழ்புணர்ச்சி, உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் இடம்பெற்றுவிட்டதாக வருந்திய மதசார்பற்ற வட்டாரங்களுக்கு இது ஒரு ஆறுதலை கொடுத்துள்ளது .
நிலஉரிமை கோரும் இந்த வழக்கு அறுபது வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு இறுதியாக அநீதியான ஒரு சார்புள்ள தீர்ப்பு அளிக்கப்பட்டது .
தாமதிக்கப்படும் நீதி என்பது நீதி மறுக்கப்படுவதாகவே கருதப்படுகிறது எனவே உச்சநீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து உடனடியாக தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம் என பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே. எம். ஷெரிப் அவர்கள் இன்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment