Tuesday, May 17, 2011

தமிழக போலீஸ் அதிகாரிகளை மனிதர்களாக்க லண்டனில் பயிற்சி!!

May 17, தமிழகத்தை சேர்ந்த 7 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு லண்டனில் விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு விசேஷ பயிற்சி கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்காக ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் 4 வாரங்களும், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் 2 வாரங்களும் தங்கியிருந்து பயிற்சி பெறவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே ஏராளமான போலீஸ் அதிகாரிகள் 2 குழுக்களாக ஐதராபாத்திலும், லண்டனிலும் இந்த பயிற்சியை பெற்று வந்துள்ளனர். தற்போது 3 வதாக உயர் அதிகாரிகள் குழுவினர் இந்த பயிற்சியை பெறுகிறார்கள்.

சிந்திக்கவும்: கழுத கெட்டா குட்டி சுவரு!! இவர்களுக்கு தேவை முதலில் மனித நேய பயிற்சி. எப்படி? "அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து நாடுகளின்" போலீஸ் மனித உரிமையோடு நடந்து கொள்கிறார்களோ, அதுபோல் முதலில் இவர்கள் நடக்க கற்று கொள்ள வேண்டும்.

மனித நேய பயிற்சிதான் முதலில் இவர்களுக்கு தேவை. அதை விட்டு விட்டு.. "இந்த போலீஸ்காரர்கள்" இப்போது பண்ணுகிற அட்டூலியத்தையே தாங்க முடியல, இன்னும் பயிர்ச்சி அது.. இதுன்னு.. பயம் காட்டாதேங்க பா!

0 comments:

Post a Comment