Tuesday, May 24, 2011

அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் நேற்று வீசிய பயங்கர சூறாவளியில் சிக்கி, 89 பேர் பலி(காணொளி


 May 24, ஜாப்ளின் : அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் நேற்று வீசிய பயங்கர சூறாவளியில் சிக்கி, 89 பேர் உயிரிழந்தனர். இச்சூறாவளியால் அம்மாகாணத்தின் ஜாப்ளின் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் நேற்று, அதிவேக பயங்கர சூறாவளி வீசியது. இதில், ஜாப்ளின் நகரில் தென்பகுதியில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாயின. நகரின் முக்கிய சாலை 10 கி.மீ., தூரத்துக்கு துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. சூறாவளியில் சிக்கி 89 பேர் பலியானதாக, ஜாப்ளின் நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மிசவுரி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள மூன்று மாகாணங்களும், பாதிக்கப்பட்டன.

0 comments:

Post a Comment