Friday, May 27, 2011

அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!!!

27 May 2011
இந்த புகை படத்தில் பார்க்கும் குப்பை தொட்டிகள் இருக்கும் இடங்கள் புதுமனைதெரு மற்றும் cmp லைன் தெருக்களில் அல்லபடாமல் இருக்கும் குப்பைகள்.
புதுமனைதெரு

புதுமனைதெருவில் இந்த குப்பை தொட்டி இருக்கும் இடம் மக்கள் நடந்து செல்லும் பாதையாக உள்ளது இந்த பாதையில் குப்பைகளை தினமும் அல்லாமல் இருக்கின்றது பேரூர் நிர்வாகம்.இங்கு கொசுத் தொல்லையும் அதிக துர்நாற்றம் வீசுகின்றது. இங்கு நடந்து செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
cmp லைன் 

cmp லைன்ல் குப்பை தொட்டிகள் அதிகஅளவில் உள்ளது ஆனால் நீங்கள் பார்க்கும் குப்பைத்தொட்டி நிலைதான் அணைத்து குப்பைத்தொட்டிக்கும்.
குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.ஆனால் இந்த குப்பைகளை அள்ளுவதற்கு இங்கு உள்ள வார்டு உறுப்பினர் முயற்சி எடுக்கவில்லை. அதுபோல் cmp லைன் வாய்கால் மரம் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கின்றது.அங்கு உள்ள வீடுகளுக்கு பாம்புகள் வரும் அபாயம் உள்ளது இதற்கு உடனடியாக வாய்காலை மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய பேரூர் நிர்வாகத்திடம் கேட்டுகொள்கிறோம்.


புகைப்பட உதவி :ஹசன் முராத்

0 comments:

Post a Comment