Thursday, May 19, 2011

பின்லேடன் பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிட்டது அல் கொய்தா


Osama Bin Laden

 அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனின் பேச்சு அடங்கிய ஒலிநாடாவை வெளியிட்டுள்ளது அல் கொய்தா. கொல்லப்படுதவற்கு முன்பு பின்லேடன் பேசிய பேச்சு இது.

பல்வேறு அல் கொய்தா ஆதரவு இணையதளங்களில் இது வெளியாகியுள்ளது. அதில், அரபு உலகை ஆட்டிப்படைத்து வந்த மக்கள் புரட்சிகளை வெகுவாக புகழ்ந்துள்ளார் பின்லேடன்.

12 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ஆடியோ ஓடுகிறது. தனது மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு இந்த ஆடியோவைப் பதிவு செய்துள்ளார் பின்லேடன் என்று தெரிகிறது.

பின்லேடன் தனது பேச்சில் கூறுகையில், வடக்கு ஆப்பிரிக்காவின் மெகரப் நகரில் தொடங்கிய புரட்சி இன்று அரபு நாடுகளில் பரவி வருவது பாராட்டுக்குரியது.

மெகரப்பில் புரட்சியின் உதயம் தொடங்கியுள்ளது. துனிசியாவிலிருந்து வந்த இந்த புரட்சி ஒளி, மக்கள் மனங்களிலும், முகங்களிலும் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.

பின்னர் எகிப்தில், தஹ்ரிர் சதுக்கத்தில் கூடிய மக்கள் போராட்டத்தின் அலை இன்று எகிப்து மக்கள் முகங்களிலும் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. இது ஆட்சியாளர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார் பின்லேடன்.

0 comments:

Post a Comment