Wednesday, May 18, 2011

மோடி வருகையால் பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியை புறக்கணித்த ம.ம.க!!

May 18, தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னையில் 16-05-2011 கோலாகலமாக நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள குஜராத்தின் முஸ்லிம்களை ஒரு பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய பயங்கரவாதி மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியில் இனப்படுகொலை நரேந்திரமோடி கலந்து கொள்வதால் பதவியேற்பு நிகழ்ச்சியை அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது.

இருந்தாலும், ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

'உங்கள் தலைமையில் இன்று பொறுப்பேற்றுள்ள தமிழக அமைச்சரவைக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் துடிப்பான சீரிய தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி புதிய வரலாறு படைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.'

0 comments:

Post a Comment