Saturday, May 21, 2011

தமுமுக-மமக வினரின் செயலுக்கு கண்டனம்!


மனிதநேய மக்கள் கட்சியின் வெற்றியை தொடர்ந்து, காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக ஆகியவற்றின் தொண்டர்கள், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்தும் வண்ணம், காரைக்கால் முக்கிய சாலைகளில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றும், அனைவருக்கும் இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளனர். இது தவறல்ல!. இத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை!. மாறாக சாலைகளில் பட்டாசு வெடித்து அநாகரிகமாக நடந்து இருப்பது மிகவும் கண்டிக்கதக்க செயல். 

தமுமுக தலைமையகத்தில் நடந்த நன்றி அறிவிப்பில், வெற்றி பெற்ற வேட்பாளரும் மமக வின் ஒருங்கினைப்பாளருமாகிய சகோதரர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், வெற்றியை இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மட்டுமே தெரிவிக்கவேண்டும் என்றும், பட்டாசுகள் வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடகூடாது என்றும் கூறியுள்ளார். எனவே தலைமையின் செயலை மீறி நடந்துள்ளவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களில் மற்றவர்களும் ஈடுபடா வண்ணம் உரிய கண்டனத்தை தமுமுக/ மமக தலைமை தெரிவிக்கவேண்டும்.

0 comments:

Post a Comment