Monday, May 30, 2011

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!

May 30, சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இந்திய தீவிரவாதிகள் உலக தீவிரவாதம் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களின் பின்னணியிலும் இருந்து செயல்பட்டது இந்த ஹிந்துத்துவா இயக்கங்களே.

மக்கா மஸ்ஜித் முதல் மலேகன் வரை, "இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு" இவர்கள் தீவிரவாதம் பற்றி பேசுகிறார்கள்.

"மதத்தை வைத்து அரசியல் நடத்த" இந்த பாரதிய ஜனதாகட்சி இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்கள் எத்தனை? எத்தனை?

இதன் மூலம் கொல்லப்பட்ட அப்பாவி சிறுபான்மை மக்கள் பல்லாயிரக்கணக்கில். இந்தியாவில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் ஊற்று கண்களாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளாகிய பாரதிய ஜனதா பார்ட்டி,

விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிஷத், இந்து முன்னணி, ஹிந்து சுயம் சேவக் சங்க், துர்க்கா வாகினி, ஆகிய அமைப்புகள் இருந்து செயல்பட்டு வந்தன.

இப்படிப்பட்ட பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி, இவர்கள் சொல்கிறார்கள் வளர்ந்து வரும் உலக தீவிரவாததிற்கு எதிராக ஒன்று பட்டு போராடவேண்டும் என்று.

வேடிக்கையாக இருக்கிறது, இந்திய தீவிரவாதத்தின் தலையாக இருந்து செயல்படுபவர்கள் உலக தீவிரவாதத்தை பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் வளர்ந்து வரும் இவர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இந்நிலையில் இந்தியாவின் மனித உரிமை இயக்கங்களும், மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும், மக்களும், தலைவர்களும் இந்த ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள் என்பது ஒரு சந்தோசமான செய்தியே

0 comments:

Post a Comment