அதிரை அருகில் உள்ள ஏரிபுறக்கரை 2வது வார்டு MSM நகரில் கடந்த வாரம் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 54 மீட்டர் நீளம் கொண்ட சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2வது வார்டு கவுன்சிலர் இந்த பணிகளை துரிதபடுத்தினார். தஞ்சை தெற்கு மாவட்ட SDPI-ன் தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டார். சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க முயற்ச்சி செய்த கவுன்சிலர் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து கொண்டனர். இதற்க்கு முன் இந்த பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியது குறிப்பிடதக்கது.
சிமெண்ட் சாலை அமைப்பதற்கு முன்
சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
பணிகளை பார்வையிடும் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்
பணிகள் முடிந்த பின்
0 comments:
Post a Comment