Saturday, January 5, 2013

சிவசேனை கட்சியின் அங்கீகாரம் "ரத்து" வழக்கு : தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

     Jan5, சிவசேனை மற்றும் "மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா" (M.N.S) ஆகிய வகுப்புவாத கட்சிகளுக்கு உள்ள "அரசியல் கட்சி" என்ற அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

     இவ்விரு கட்சிகளும், தேசிய நலனுக்கு எதிராக செயல்படுகின்றன.

     இக்கட்சிகளுக்குள்ள "அரசியல் கட்சி" என்ற அந்தஸ்தையே ரத்து செய்யவேண்டும், என சமூக ஆர்வலர் "பிரஜேஷ் கல்பா" உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

     வழக்கை விசாரித்த ஜஸ்டிஸ் ஆர்.எம்.லோடா மற்றும் அணில்.ஆர். தவே, ஆகியோர் அடங்கிய அமர்வு, விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது

0 comments:

Post a Comment