Thursday, January 3, 2013

கௌசியா காலனி சோகம் : கடுங்குளிரால் மூவர் மரணம்!

   Jan3, பா.ஜ.க. என்ற எதிரியை எதிர்கொள்வது எளிது, என எண்ணக்கூடிய அளவுக்கு, காங்கிரசின் துரோக செயல்களால், சொந்த இடத்தை இழந்து, வெட்டவெளியில் கடுங்குளிரில் சமுதாயம் செத்துக்கொண்டிருக்கிறது.

     வாக்களித்த மக்களின் சாபங்களால் தான், தினம் தினம் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, காங்கிரஸ் தலைவர்கள் புழுக்களைப்போல நெளிந்துக்கொண்டிருக்கிறார்கள்.

     டெல்லி மெஹர்வலியின் "கௌசியா காலனி"யில் "வக்ப்" வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூக மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கி, அவர்களை கடுங்குளிரில் சாகடித்து வருகிறது, டெல்லியை ஆளும் காங்கிரஸ் அரசு.

     அரசின் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விஷயத்தில் பாராமுகம் காட்டி வருகிறது,காங்கிரஸ் அரசு.
வரலாறு காணாத பனி மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டு, 20 நாட்களில் 3 முஸ்லிம்கள் மரணமடைந்துவிட்டனர்.

     ஒரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. பல அமைப்புக்களும்-தலைவர்களும் கூடிகளைந்தாலும், இதுவரை உருப்படியாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

     பாதிக்கப்பட்ட மக்களை, டெல்லி ஷாஹி ஃபதஹ்பூரி பள்ளியின் இமாம், முப்தி முஹம்மத் முகர்ரம், நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
    அப்போது, எஸ்.டி.பி.ஐ.யின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இந்த அவல நிலைக்கு டெல்லி வக்ப் வாரியத்தின் கவனக்குறைவும் ஒரு முக்கிய காரணம், என பரவலாக கருத்து நிலவுகிறது.

0 comments:

Post a Comment