Friday, January 4, 2013

கேரளா:பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு!

4 Jan 2013 Death sentence for accused in Kerala rape, murder case
 
     திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு தண்டனையை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
     கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த ஆர்யா என்ற மாணவி அப்பகுதி பள்ளி ஒன்றில்10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், வீட்டில் படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவும் அதை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது ஆர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த ராஜேஷ் அப்பெண்ணை பலாத்காரம் செய்து கொலைச் செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றுவிட்டான்.
 
     இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கட்டக்கடா பகுதியைச் சேர்ந்தவரான ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார்தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமாரை மார்ச் 13-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ஆர்யாவின் நகைகளையும் மீட்டனர். பின்னர் 3 மாத கால விசாரணைக்குப் பிறகு விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 8-ந் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. மொத்தம் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி ராஜேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுசீந்திர குமார் தீர்ப்பளித்தார்.
 
     பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நன்றி, தூது

0 comments:

Post a Comment