Sunday, January 13, 2013

அதிரையில் களத்தில் இறங்கிய SDTU!

அதிரையில் தன் சேவையை தொடங்கியது SDTU என்னும் தொழிலாளர்களுக்கான தேசிய இயக்கம். இதில் ஒரு பகுதியாக நேற்று முந்தினம் ஆட்டோவில் பயணித்த ஒருவர் தன்னிடம் இருந்த பாஸ்புக் போன்ற முக்கிய ஆவணங்களை ஆட்டோவில் தவரவிட அதை பார்த்த டிரைவர் SDTU-வின் அமைப்பாளர் ஹிதாயதுல்லாஹ் அவர்களின் மூலம் இதை உரியவர்களிடம் சேர்க்கும் முயர்ச்சியில் இறங்கினர். பின் நேற்று மாலை தஞ்சை தெற்கு மாவட்ட SDPI அலுவலகத்தில் வைத்து பாஸ்புக் போன்ற ஆவணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது. அப்போது அதிரை நகர SDPI தலைவர் சலீம் மற்றும் நிறுவாகிகள் உடனிருந்தனர். இந்த உதவியை செய்த SDTU-அமைப்பாளர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

0 comments:

Post a Comment