Wednesday, January 2, 2013

பாலியல் குற்றவாளிகளை தண்டிப்போம் – மணிப்பூர் போராளி இயக்கம் அறிவிப்பு!

1 Jan 2013
 
    இம்பால்:பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை நாங்களே தண்டிப்போம் என மணிப்பூரில் காங்லிபாக் கம்யூனிஸ்ட் இயக்கம் தெரிவித்துள்ளது.
 
     மணிப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள நாபேட் பள்ளியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தோழிகளுடன் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக சென்றுகொண்டிருந்தார். அப்போது காங்லிபாக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட மூன்று பேர் அந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
 
     இந்தச் சம்பவத்துக்கு பல சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றவாளிகளைத் தாங்களே தண்டிக்கப் போவதாக மாவோயிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. இதையடுத்து மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்.
 
     இந்நிலையில் காங்லிபாக் கம்யூனிஸ்ட் இயக்கம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
 
     எங்கள் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை மன்னிக்க முடியாது. சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட மூவருக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் காவலில் இருந்து பிணையில் வெளியே வந்தால் நாங்களே தண்டிப்போம் எனக் கூறியுள்ளனர். நன்றி, தூது 

0 comments:

Post a Comment