Tuesday, January 1, 2013

பாலியல் பலாத்காரம் : வீதிகளில் குத்தாட்டம்; குடும்பத்துக்கு 100 கோடி கேட்டு போராட்டம்!


     Jan1, டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இளம்பெண் மரணமடைந்​தார். இதற்க்கு தீர்வு கேட்டு, டெல்லி வீதிகளில் ஆண்களும் பெண்களும் குத்தாட்டம் போடுவது - கும்மாளம் அடிப்பது, மேலும் பல பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.
 
    கடந்த டிசம்பர் 16ந்தேதி, மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்துவதை குறை கூறமுடியாது, என்றாலும் அதில் ஆண்களும் பெண்களும் குத்தாட்டம் போட்டு கும்மாளம் அடிப்பதை சகிக்க முடியவில்லை.

    தற்போது, மாணவி இறந்துவிட்ட நிலையிலும் இந்த குத்தாட்டங்கள் குறைந்த பாடில்லை. நேற்று, குத்தாட்டத்துடன் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துக்கொண்ட ஒரு அமைப்பு, வீர மரணமடைந்த மாணவியின் குடும்பத்துக்கு, உடனடியாக ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும், என குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
 
    குறிப்பு: நாகரீகம் கருதி மோசமான உடைகளுடன் ஆணும் பெண்ணும் நெருக்கமாக உள்ள படங்களை பிரசுரிக்கவில்லை.

0 comments:

Post a Comment