Tuesday, April 12, 2011

பெண்ணைக் கொன்று ராஜஸ்தானுக்கு பார்சலில் அனுப்பிய கொடூரன்!


டெல்லி மற்றும் முக்கிய நகரங்களில் பார்சல்களை ஏற்றி செல்லும் தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு கடந்த 31-ந் தேதி ஒருவர் பெரிய பார் சலை எடுத்து வந்தார்.

இதை ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அதற்கான கட்டணங்களையும் செலுத்தினார்.

அந்த நிறுவனத்தினர் பார்சலுக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்காமலேயே அதை அங்கிருந்து ஆஜ்மீரில் உள்ள தங்களது கிளை அலுவலகத்துக்கு லாரி மூலம் அனுப்பி வைத்தனர். கடந்த 3-ந்தேதி பார்சல் ஆஜ்மீர் வந்து சேர்ந்தது.

ஆனால் பல நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் பார்சலை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. எனவே பார்சலை ஓரமாக ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையில் பார்சலுக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது. எனவே சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அதை திறந்து பார்த்தனர். உள்ளே நிர்வாண நிலையில் பெண் பிணம் ஒன்று இருந்தது.

உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தீக்காயங்களும் இருந்தன. அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த பெண் யார்? பிணத்தை அனுப்பியது யார்? என்று தெரியாமல் இருந்தது.

தற்போது டெல்லி பார்சல் நிறுவனதில் அந்த பார்சலை அனுப்ப வந்த நபர் யார் என்று அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதத்தில் டெல்லியில் பெண்கள் காணமல் போனதாக கூறி 15 குடும்பத்தார்கள் புகார் அளித்திருந்தனர்.

இதை தொடர்ந்து டெல்லியிலிருந்து 2 குடும்பத்தார்கள் ஆஜ்மீர் வந்துள்ளனர் ஆனால் அப்பெண்ணின் முகம் அடையாளம் தெரியாதபடி இருக்கிறது .

பின்னர் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ள உருவம் மற்றும் பார்சல் அனுப்ப வந்தவர் பற்றி சில அடையாளங்களை பார்சல் நிறுவன ஊழியர்கள் தெரிவித்த அடையாளங்களையும் வைத்து பிணத்தை அனுப்பியவர் யார்? என கண்டு பிடிக்க முயற்சி நடக்கிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர் .


0 comments:

Post a Comment