Tuesday, April 19, 2011

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சிரியாவில் துப்பாக்கிச் சூடு.


சிரியாவில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். இதனால், அங்கு மக்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

சிரியாவில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம், ஒரு வாரத்தில் ரத்து செய்யப்படும்' என, கடந்த 16ம் தேதி, அதிபர் பஷர் அல் அசாத் அறிவித்தார். அதை ஏற்காத மக்கள், 17ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஹோம்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் மீது பாதுகாப்பு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 அப்பாவி மக்கள் பலியாயினர். அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இந்நிலையில், "சிரியா நகரங்களில் செய்தித் தொடர்பாளர்கள் இயங்க முடியாத நிலை இருப்பதால், அவற்றில் என்ன நடக்கின்றது என்று சரிவரத் தெரியவில்லை' என, "அல் ஜசீரா' நிருபர் ஒருவர் கூறினார். இறுதிச் சடங்கினை தொடர்ந்து சண்டைகள் நிகழக் கூடும் என்ற பீதியில் மக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment