Saturday, April 2, 2011

சாதிக் பாட்சா மரணம் குறித்து சிபிஐ விசாரணை

புதுடெல்லி : சாதிக் பாட்சா மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ தயாராக இருப்பதாகவும், அவருடைய மரணத்தை சிபிஐ விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா, மார்ச் 16ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையை சென்னை போலீசார் முடித்துவிட்டனர்.

0 comments:

Post a Comment