Friday, April 1, 2011

தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கமுடியாது : சென்னை ஐகோர்ட்



சென்னை : சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், திறம்படவும் நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பணம், பொருள் பறிமுதல் தொடர்பாக பல பொதுநல வழக்குகள் இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், ‌பணம், பொருட்கள் பறிமுதல் செய்யக்கூடாது என்று கண்டிப்பாக தாங்கள் தெரிவித்துள்ளோம். தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment