Tuesday, April 19, 2011

சீனாவில் சூறாவளி: 18 பேர் பலி


சீனாவின் தென் பகுதியில் நேற்று பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் மேகவெடிப்பு, பயங்கர சூறாவளியில் சிக்கி 18 பேர் பலியாகினர். 155 பேர் காயம் அடைந்தனர். சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், நேற்று பயங்கர சூறாவளி வீசியது. அதோடு, ஆலங்கட்டி மழையும் பெய்தது. குவாங்÷ஷாவூ, போஷன், ஷாவோகிங் மற்றும் டொங்குவான் நகரங்கள் இதில் பெரும் பாதிப்படைந்தன. மணிக்கு 164 கி.மீ., வேகத்தில் வீசிய புயலால், 45 வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரத்து 87 எக்டேர் பரப்பளவு வயல்வெளிகளில் பயிர்கள் நாசம் அடைந்தன. 3, 200 பேர் பாதிக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புயல் மற்றும் மழையால், இப்பகுதியில், 66 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment