Sunday, April 10, 2011

விக்கிலீக்ஸ் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் சாம்பலும் மிஞ்சியிருக்காதாம்!

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் அவரது சாம்பலும் மிஞ்சியிருக்காது என ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஊடகத்துறை மீதான தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தணிக்கையுடனேயே உரையாற்றும் நிலைமை உருவாகியுள்ளது. இணையத்தளங்களை தணிக்கை செய்ய முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று நடாளுமன்றத்தில் சுனில் ஹந்தன்நெத்தி கேள்வி எழுப்பினார். 

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இலங்கையில் இருந்திருந்தால் சாம்பலும் மிஞ்சியிருக்காது. உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகளை ஒழித்த இராணுவம், பொலிஸ், உளவுப் பிரிவினர் எம்மிடம் உள்ளனர். அப்படியெனில் ஏன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது. 

குற்றங்களை மறைக்க, மறைக்க அது மேலும் மேலும் வெளிவரும் என சுனில் ஹந்துநெத்தி மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment