Monday, April 11, 2011

3 வயதேயான மகனுக்கு பச்சைக் குத்திய தந்தைக்கு சிறைத் தண்டனை!

போதையில் தனது மூன்று வயது மகனின் தோள்பட்டை மீது பச்சை குத்திய 26 வயது தந்தைக்கு ஒருவருட கால நன்னடத்தை சிறையும், 300டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. 

யுஜென் ஆஷ்லி என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. தனது மகன் மெத்தியு வின் தோள் பட்டையிலேயே “டெடிஸ் போய்” எனக் குறிக்கும் வகையில் “டிடி” என்ற எழுத்துக்களை இவர் பச்சைக் குத்தியுள்ளார். 

அரசாங்க சமூக சேவைப் பிரிவினர் இந்த வீட்டுக்கு விஜயம் செய்த போது சிறுவனின் உடம்பில் பச்சை குத்தப்பட்டுள்ளதை அவதானித்து உரிய நடவடிக்கை எடுத்தனர். 



இதன் பலனாக தந்தை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் குடிபோதையில் செய்த தனது குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.



18 வயதுக்குக் கீழ்பட்டவர்களின் உடம்பில் இவ்வாறு பச்சைக் குத்துவது சட்டப்படி குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment