
இலங்கையில் பிறந்த ஜேமஸ் எனப்படும் நபரே கைது செய்யப்பட்டவராவார். அவரின் அநாகரீகச் செயலின் பின்னால் இருக்கும் விடையங்களை அறிந்த நீதிபதி அதிர்சியில் உறைந்துபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1991ம் ஆண்டு அவரை இலங்கை இராணுவம் கைதுசெய்து, பல மாதங்களாக அடைத்துவைத்து சித்திரவதை செய்ததாகவும், அவர் ஆண் உறுப்பிலும், இடுப்பிலும் மின்சாரத்தை செலுத்தி கொடுமை செய்துள்ளதாகவும் ஜேமசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார். ஜேமஸ் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் இலங்கை இராணுவத்தின் கொடுமைகளால் அவர் இவ்வாறு ஆளாகியுள்ளதாவும் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதவான், அதிர்சியளிப்பதாவும் மேலும் இலங்கையில் அவருக்கு ஏற்பட்ட கொடுமைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதை தான் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். இக் குற்றச் செயல்களுக்காக சீர்திருத்த சிறைத்தண்டனை வழங்கியுள்ள நீதவான், தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மேலதிகமாக பிரத்தியேக மனநல மருத்துவரை அணுகுமாறும் பரிந்துரை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment