Monday, April 18, 2011

அவசரநிலை சட்டம் சிரியாவில் ரத்தாகிறது.

சிரியாவில், 1963 முதல் அமலில் இருந்து வரும் அவசரநிலை சட்டம், அடுத்த வாரம் ரத்து செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் அறிவித்துள்ளார். இதனால் அங்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிரியாவில், எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம், அவசர நிலை சட்ட ரத்து, அதிபர் பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில், கடந்த வாரம் அமைச்சரவையைக் கலைத்த அதிபர் அசாத், புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
நேற்று அந்த அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்தது. அப்போது அதில் அசாத் பேசியதாவது:கடந்த 48 ஆண்டுகளாக அமலில் இருக்கும் அவசரநிலைச் சட்டம், அடுத்த வாரம் ரத்து செய்யப்படும். இச்சட்ட நீக்கத்தால் நாட்டில் சீர்குலைவு எதுவும் ஏற்பட்டு விடாது. எனினும் அன்னிய சக்திகள், சிரிய மக்களைத் தூண்டி விட்டு குளிர்காய நினைக்கின்றன.அவசர நிலை சட்ட நீக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சட்டக் குழு, தன் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரைவில் அந்தப் பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்படும். அதன்படி, அவசர நிலைச் சட்டம் நீக்கப்படும். அதிகபட்சமாக, அடுத்த வாரத்துக்குள் சட்டம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அசாத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment