Thursday, April 28, 2011

யானை வரலாறு சுருக்கம்


நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.அத்தியாயம் - 105

அபீஸீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷியின் பிரதிநிதியாக யமனில் ஆட்சி செய்த அப்ரஹா என்பவன், அரேபியர்கள் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வை ஹஜ் செய்வதையும் அதனை அவர்கள் புனிதப்படுத்துவதையும், மிகவும் தூரமான பகுதிகளிலிருந்தெல்லாம் அங்கு வருவதையும் கண்டபோது ஸன்ஆ என்ற ஊரில் பொரிய சர்ச் ஒன்று கட்டினான்.

ஹஜ்ஜீக்கு செல்லும் அரபியரை அதன் பால் திருப்பிவிட வேண்டும் என்பதற்காக இதைக் கேள்வியுற்றதும் அரபுக் குலங்களில் ஒன்றான பனூ கினானாவைச் சேர்ந்த ஒருவன் இரவில் அந்த சர்ச்சினுள் நுழைந்து அதன் சுவர்களில் மலத்தைத் தேய்த்து விட்டான். இதைக் கேள்வியுற்றதும் அப்ரஹா கொதித்தெழுந்தான். ஆறாயிரம் போர் வீரர்கள் கொண்ட மிகப்பெரும் படையைத் தயார்படுத்தினான். அப்படையில் ஒன்பது யானைகள் இருந்தன. அவற்றில் மிகப்பெரிய யானையைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக அப்படையுடன் புறப்பட்டான்.. மக்காவிற்கு அருகே வந்தடைந்ததும் தன் படையைத் தயார்படுத்தி மக்காவிற்குள் நுழைய ஆயத்தமானான். எனினும் அவன் யானை மக்காவை நோக்கிச் செல்லாமல் படுத்துவிட்டது. அவர்கள் யானையை வேறு திசைகளின் பக்கம் திருப்பினால் எழுந்து ஓட ஆரப்பிக்கிறது. மக்காவை நோக்கித் திருப்பினால் படுத்துக்கொள்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது "அபாபீல்" பறவைக் கூட்டங்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அவை நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட சிறு சிறு கற்களை அவர்கள் மீது எறிந்தன. ஒவ்வொரு பறவையும் கொண்டைக் கடலை அளவிலான மூன்று கற்களைச் சுமந்து வந்தது. ஒன்று அவற்றின் அலகிலும் மற்ற இரண்டு இரு கால்களிலும் இருந்தன. அக்கற்கள் ஒருவன் மீது விழுந்துவிட்டால் அவனுடைய உறுப்புகள் துண்டு துண்டாகி சிதைந்து அவன் அழிந்தேபோவான். அவர்கள் பயந்து ஓடும்போது வழியிலேயே விழுந்து அழிந்தனர்.

அப்ரஹாவின் கதி என்னவெனில், அல்லாஹ் அவன் மீது ஒரு நோயை அனுப்பினான். அதன் காரணமாக அவனது விரல்கள் அழுகி விழுந்தன. ஸன்ஆவை அடைவதற்குல் அந்நோய் அவன் உடல் முழுவதும் பரவி அங்கேயே செத்து மடிந்தான். பிறகு யானைப் படையினருக்கு நேர வேண்டியது நேர்ந்தது பிறகு குரைஷிகள் அச்சமற்றவர்களாக வீடு திரும்பினர். இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாள்களுக்கு முன்பு நடைப்பெற்றது.

0 comments:

Post a Comment