Thursday, January 3, 2013

ஆதிவாசி பெண்கள் மற்றும் சிறுபான்மையின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்-நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்





      கோழிக்கோட்டில் கடந்த டிசம்பர் 26,27-2012 அன்று நடந்த தேசிய கமிட்டி NWF-ன் தேசிய தலைவி ஷாஹிதா தஸ்லீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் சமூகமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று தான் கூறிக் கொண்டிருக்கிறது.பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வளவுதான் தண்டனைகள் கொடுத்தாலும் அவர்களுக்கு இழந்தது ஈடாகாது.பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.


     பாலியல் கொடுமைகளில் ஈடுபடுகின்றவன் ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் அவன் தண்டிகப்படுவதும் அவன் செல்வந்தனாக இருந்தால் தப்பித்துக்கொள்ளும் நிலைதான் நம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். பெண்களுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் இந்த பிரச்சனையில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு வெளியில் கொண்டு வரவேண்டும்.இந்தியாவில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் முறைகளை கல்வியில் (பாடத்திட்டத்தில்)கொண்டு வர வேண்டும்.சமூக சேவகியான அருந்ததி ராய் மணிப்பூரில் பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்களை வெளியே கொண்டு வந்தார்.


     ஆதிவாசி பெண்கள் ,பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுகளையும் அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் NWF -ன் தேசிய கமிட்டி கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு
தேசிய ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF)

0 comments:

Post a Comment