Saturday, September 29, 2012

சொஹ்ரபுத்தீன் ஷேக் கொலை வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு!

Abhy Chudasama

அஹ்மதாபாத்:சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஐ.பி.எஸ் அதிகாரி அபய் சுதாசமாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீயை அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஐ.பி.எஸ் அதிகாரி அபய் சுதாசமா ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். இம்மனு மீதான விசாரணையில் நீதிபதி அபிலாஷா குமாரி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடிச் செய்தார்.
அவர் தனது தீர்ப்பில் கூறியது: “குற்றம் சாட்டப்பட்டவர் உயர் போலீஸ் அதிகாரி ஆவார். ஜாமீன் வழங்கினால் வழக்கின் முக்கிய சாட்சிகளை மிரட்டுதல்,  வழக்கில் தலையிடுதல் போன்ற வாய்ப்புகளை மறுக்க முடியாது” என்று கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடிச்செய்தார்

0 comments:

Post a Comment