Monday, September 24, 2012

உண்மையை எழுதுங்கள் : சகோ. தமீம் அன்சாரி

பத்திரிகைகளும் ஊடகங்களும் என்னைப் பற்றி நன்கு விசாரணை செய்து உண்மையை எழுத வேண்டும் என, திருச்சியில் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி நீதிமன்றத்தில் தமீம் அன்சாரியை போலீசார் ஆஜர்படுத்தினர். தமீம் அன்சாரியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த க்யூ பிராஞ்ச் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். அக்டோபர் 1 வரை நீதிமன்ற காவல் உள்ளதால் தமீம் அன்சாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார். 

சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய தமீம் அன்சாரி, 

நான் மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். பத்திரிகைகளும், ஊடகங்களும் என்னை மிகப் பெரிய தீவிரவாதியாக சித்தரித்து எழுதுகிறீர்கள். எனக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. நான் ஒரு அப்பாவி.

டிவிஎஸ் டோல்கேட்டில் வைத்து என்னை கைது செய்ததாக க்யூ பிரான்ஞ்ச் போலீசார் சொன்னதாக எழுதியுள்ளீர்கள். ஆனால் நான் திருச்சி ஏர்போட்டுக்குள் போடிங் பாஸ் வாங்கி விமானத்தில் செல்ல காத்திருந்தேன். என்னோட பாஸ்போர்ட் டேமேஜ் ஆகிவிட்டது என விமான நிலைய அதிகாரிகளிடம் காண்பித்தேன். அப்போது உள்ளே புகுந்த க்யூ பிரான்ச் போலீசார் என்னை கடத்தி கொண்டு வந்துவிட்டார்கள். தயவு செய்து என்னை பற்றி விசாரித்து உண்மையை எழுதுங்கள். 

என்று கோரிக்கை விடுத்தார்.

நன்றி : நக்கீரன்

1 comment:

  1. அல்லாஹு போதுமானவன். சில பேருக்கு முஸ்லிம் சமுதாயம் என்றாலே தீவிரவாதியாதான் பார்கிறார்க்கள்.உங்களுக்கு நிச்சியம் விடுதலை கிடைக்கும்.துவா செய்யுகள்.

    ReplyDelete