Monday, September 24, 2012

தாலுக்கா அலுவலகம் முற்றுகை! அழைக்கிறது SDPI கட்சி!!


தமிழகத்தில் அரசே மதுக்கடைகளை நடத்தும் காரணத்தாலும் மது விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை அரசே எடுப்பதாலும் மதுகுடிக்கும் பழக்கம் மக்களிடையே மிக வேகமாக பரவிவருகிறது. இது பற்றி SDPIன் மாநில செயற்குழுவில் மிகுந்த கவலையுடன் விவாதிக்கப்பட்டது.

மக்களை சீரழித்து பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் மதுவை தடை செய்ய வலியுறுத்தியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை நடைபெற உள்ளது. 

தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக பட்டுக்கோட்டையில் அக்டோபர் 2 அன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டமும் அக்டோபர் 17 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் மக்கள் நலனில்  அக்கரையுள்ள ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் கலந்துக் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டுமென SDPIன் அதிரை நகர கிளை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment