Saturday, September 8, 2012

செக்கடிப்பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி!!! அதிரையில் பரபரப்பு!!

07/09/2012 (வெள்ளிக்கிழமை) மதியம் 2:30 மணிக்கு நமதூர் செக்கடிபள்ளிக்கு உட்பட்ட குளத்துமேட்டில் உள்ள நிலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்ணேற்ற கழகம் {த.மு.மு.க}-வை சேர்ந்த  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் எவ்வித அனுமதியும் இன்றி அந்நிலத்தை புரம்பபோக்கு நிலம் என கூறீக்கொண்டு இரும்பு கொட்டகை போடுவதற்கு சிமெண்ட்,மணல்,பெரிய இரும்பு குழாய் ஆகிய கட்டுமான பொருட்களை கொண்டுவந்து கட்டுமான வேலைகளை முழு வீச்சுடன் செய்து கொண்டிருந்தனர்.


இந்நிலையில் மாலை 5.00 மணியளவில் தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த செக்கடிபள்ளி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் காவல்துறையினறிடம் புகார் மனு அளித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஆய்வாளர் திரு.செங்கமலக்கண்ணன் அவர்களுடன் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் ஆக்கிரமிப்பிற்கான கட்டுமான பணியினை உடனே தடுத்து நிறுத்தினர். இதனால் செக்கடிமேட்டில் பெறும் பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் த.மு.மு.க வின் ஆகிரமிப்புச்செயலை வண்மையாக கண்டித்துள்ளதுடன், செக்கடிபள்ளி நிர்வாகத்தினருடன் இனைந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

1 comment:

  1. al ameen palli marrum siththik palliyai thodarnthu sekkadi pallikkum sothanaiyaa?

    ReplyDelete