Saturday, March 26, 2011

பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி வைத்து கொள்வதற்கான லைசென்ஸ்



லண்டன் : பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி வைத்து கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ‌ஏற்படுத்தி உள்ளது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரை 10 வயதிற்கு உட்பட்ட 13 குழந்தைகளுக்கு இது போன்ற லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் உள்ள 51 அமைப்புக்கள் அளித்த தகவலின் பேரில் இந்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 வயதிற்கு உட்பட்ட 7,071 பேருக்கு இது போன்ற லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புறாக்களை வேட்டையாடுவதற்காக மட்டுமே இந்த லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளது.
thanks to thaalam

0 comments:

Post a Comment