Friday, March 25, 2011

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சி : இன்டபோல் முறியடிப்பு !




தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் போது தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென இன்டபோல் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளயிருந்த இடங்களை கடந்த வாரம் தாம் அடையாளம் கண்டதாக பிரான்ஸை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச பொலிஸ் முகவர் நிலையத்தின் பிரதான அதிகாரியான ரோனால்ட் கே நோபில் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் - கராச்சி நகரிலிருந்து மாலைத்தீவு நோக்கி பயணமாக இருந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமக்கு வழங்கிய ஒத்துழைப்பை அடுத்தே இந்த தாக்குதல் சம்பவத்தை தம்மால் தடுக்க முடிந்ததாக தெரிவித்த அவர், அதனால் அனைத்து நாடுகளுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
thank u thaalam

0 comments:

Post a Comment