Monday, March 7, 2011

தாய் பாலில் ஐஸ்க்ரீம்!

லண்டன்,மார்ச்.7:நவ நாகரீக உலகில் எதனைச் செய்யவேண்டுமென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. எதையாவது புதியதாகச் செய்யவேண்டுமென்ற பேரில் வக்கிரங்களை அரங்கேற்றுவது மேற்கத்திய உலகிற்கு புதியதல்ல.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் நகரில் தாய்ப்பாலில் ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டது ஒரு ரெஸ்ட்டாரெண்ட். தாய்ப்பாலில் தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீமின் விற்பனை உடனடியாக விற்றுத் தீர்ந்தது. ஆனால், ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக ஐஸ்க்ரீம் விற்பனையை மாநகர கவுன்சில் அதிகாரிகள் தடைச் செய்தனர்.

செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment