Wednesday, March 23, 2011
மார்ச் 23,: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் SDPI எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என் ஏற்கனவே அறிவித்தது. அதன் படி முதல் கட்டமாக ஆறு தொகுதிகள். கடையநல்லூர், இராமநாதபுரம், பூம்புகார், நாகை தொண்ட முத்தூர், துறைமுகம், காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டின ஆகிய தொகுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக நேற்று நடந்த செயற்குழுவில் கூடி முடிவெடுக்கப்பட்டது. அதன் படி பாளையங்கோட்டை மற்றும் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி பாளையங்கோட்டை வேட்பாளராக மேலபாளையத்தை சேர்ந்த மொவ்லவி சாகுல் ஹமீத் உஸ்மானியும், திருப்பூர் தொகுதி வேட்பளராக அமானுல்லவும் தேர்ந்தடுக்கப் பட்டுள்ளனர்.
by sinthikkavum blogger
0 comments:
Post a Comment