Friday, March 25, 2011

தமிழக சட்டசபை தேர்தல் மனுதாக்கல் நாளையுடன் முடிகிறது



சென்னை : தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சனிக்கிழமை (19-ந் தேதி) தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் நேற்று குறிப்பிட்ட நேரத்தில் மனு செய்தனர். 234 தொகுதிகளிலும் நேற்று வரை 1052 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்றும் நிறைய பேர் மனு தாக்கல் செய்தனர். 234 தொகுதிகளிலும் நாளை (26-ந் தேதி) வேட்பு மனு தாக்கல் முடிகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 30-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும்.
thank u thaalam

0 comments:

Post a Comment