Saturday, March 5, 2011

பக்தி என்ற பெயரிலே புரோகிதம் வளர்க்கும் தினமலர்!

மார்ச்:5, நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார்.( செய்திகள்: தினமலர்).

சிந்திக்கவும்: எங்கே இந்த நாடு உருப்பிட போகுது. இந்த புரோகித பார்ப்பன தினமலரின் மூட நம்பிக்கையை பாருங்கள். இதை ஒரு செய்தியாக பெரிய படத்துடன் போட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் இப்படியும் மக்களா? அடபாவிகளா! "பாட்டி வடை சுட்டாள் காக்காய் தூக்கிட்டு போயிட்டு" என்று எத்தனை நாளுக்கு கதை சொல்வீர்கள். பக்தி என்கிறபெயரில் இப்படி ஒரு கிறுக்குத்தனம் அதற்க்கு வக்கலாத்து வாங்கும் பார்பன வந்தேறி கூட்டம். இந்த அப்பம் சுட மூன்று மாதம் விரதம் வேறு. அட முட்டாள்களா? செட்லைட்டும், 3 ஜியும், விடியோ கான்பிரன்ஸ் என்று உலகம் எங்கோ போயிகிட்டு இருக்கு இவர்கள் என்னவென்றால்? இன்னும் கற்காலத்தில் இருகிறார்கள்.

தீ மிதிப்பது முதல் லிங்கம் எடுப்பதுவரை, அழகு குத்துவது முதல் திருநீறு வரவழைப்பது வரை எல்லா வித்தைகளையும் திக காரர்கள் செய்து காட்டிவிட்டார்கள், இருத்தும் நீங்கள் திருந்தமாட்டீன்களா? இதை ஒரு அற்புதம் மாதிரி இந்த தினமலர் மோடிவித்தைகாரர்கள் செய்திபோட்டு ஹிந்துத்துவா வை வளர்கிரார்களாம். ஏன்? எல்லா சாமியாரும், பூசாரியும், திருநீறும், லிங்கமும், தீசட்டியும் இப்படி பழசையே செய்கிறார்கள். அமெரிக்காகாரன் ராகெட் உட்டான் என்றால்? உங்கள் பார்பன புரோகிதர்கள் அட்லீஸ்ட் ஒரு தட்டையாவது பறக்க விடட்டுமே. என்னங்கடா மாய்மாலம் பண்றீன்கள். இதை தினமலரின் பார்பன புரோகித வளர்ப்பு சித்தாந்தமாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

0 comments:

Post a Comment