Wednesday, March 23, 2011

ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. 

ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்தே அந்நாடு இன்னுமமீளாமல் உள்ளது. 

இந்நிலையில் நேற்றும், அதனைத் தொடர்ந்து இன்றும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் வெடித்த அணு உலைகளை குளிர்விக்கும் பணி நடந்து வரும் நிலையில்,அப்பகுதியில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.



thank u to tamil.webdunia.com

0 comments:

Post a Comment