Tuesday, April 17, 2012

பழனியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்


பழனி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஐந்து இடங்களில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டினை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இதற்கான பிரச்சாரம் தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், மாநில பேச்சாளர் அன்ஸர் இமாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment