Wednesday, April 11, 2012

கொலை வெறி கும்பலுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய காவல்துறை!


ஹைதராபாத் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்வா தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராஜா சிங் என்ற ஹிந்துத்வா வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 
அவரிடம் இருந்து காவல்துறை பல முக்கிய தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது., மேலும் விசாரணையில் ஹிந்துத்வா வாதிகள் ஆந்திர காவல்துறையில் சேருவதற்கு தாம் பயிற்சி அளித்ததை ராஜா சிங் உறுதி செய்துள்ளார்.

மேலும் சங்கப் பரிவார இளைஞர்களை காவல்துறையில் சேர்ப்பதற்கு பயிற்சி அளித்ததில் தனக்கு பணி ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புலனாய்வு சிறப்பு பிரிவு ராஜா சிங்குடன் தொடர்புடைய அந்த ஆதிகாரி யார் என்பதை கண்டறிந்துள்ளனர். அவர் கடந்த 30 வருடங்களாக ஆந்திர காவல்துறையில் பல உயர் பதிவிகளில் இருந்தவர் என்றும் அவரின் காவிப்பற்று அனைவரும் அறிந்த ஒன்று என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் ராஜா சிங்; ‘ஹிந்துத்வா தீவிரவாதிகள் விரைவில் தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாகவும் அதற்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பதை தாம் தெரிவிக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தேஜஸ்

0 comments:

Post a Comment