
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். அப்பேட்டியின் போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் ரெட்டி முஸ்தாக் அஹமது உடன் இருந்தார்.
வி. தினேஷ் ரெட்டி காவல்துறையில் மூத்த அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் தான் அதிக அளவில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுள்ளது. வகுப்பு வாத வன்முறைகளை ஏற்படுத்துவதற்கும் அதனை கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் காவல்துறைக்குள்ளும் ஃபாசிஸ பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள் என்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐயின் தலைவர்கள் மாநில அரசிடன் 5 கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.
1. மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில உடனே மேற்கொள்ள வேண்டும்.
2. வன்முறையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும்.
3. சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் காவல்துறையில் ஊடுறுவுவதை தடுத்து அத்துறையை தூய்மைப்படுத்த வேண்டும்.
4.சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, ஹிந்துவாஹினி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
5. வகுப்புவாத வன்முறையை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உடனே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment