Tuesday, April 17, 2012

பயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்

உலகம் காலணி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கித்தவித்த காலம் தான் மனிதனின் வரலாற்றில் ஒரு மோசமான கால கட்டம் என்று கூறலாம். காலனி ஆதிக்கம் லட்சக்கணக்கான மக்கலை பலிகொண்டதோடு மட்டுமல்லாமல் பல நாடுகளின் கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் சீரழித்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகள் காலனி ஆதிக்கத்தை விரட்டியடிப்பதற்காக லட்சக்கணக்கான உயிர்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. மனிதனின் வரலாற்றில் மோசமான காலகட்டத்தின் அத்தியாயம் இத்தோடு முடிந்துவிட்டது என்று கருதினோம். ஆனால் நம்முடைய எண்ணம் தவறானதாகும் என்பது தற்போது புரிகிறது, காரணம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏகாதிபத்திய சக்திகள் இன்றும் நேரடி படையெடுப்பின் மூலமாகவும், ஆயுத பரிமாறுதல் மூலமாகவும், பயங்கரவாத நாடுகளை உருவாக்குவதின் மூலமாகவும் இன்றளவிலும் உலகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது.


"இஸ்ரேல்" - பல்லாயிரக்கணக்கான ஃபல்ஸ்தீனர்களை கொன்று குவித்து அவர்களின் உடல்களுக்கு மேல் காலனி ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்ட‌ ஒரு பயங்கரவாத நாடாகும்.



இஸ்ரேல் என்ற பயங்கரவாத நாடு உருவாக்கப்பட்ட வரலாறே மனிதாபிமானமற்ற வன்முறையை அடிப்படையாக கொண்டுதான் இதனாலேயே தன்னுடைய ஜியோனிஸ கொள்கையை நியாயப்படுத்துவதற்காக மனிததன்மையற்ற வன்முறைகளை கையாண்டு வருகிறது. பிறரது மண்ணில் யூதர்களுக்கான நாட்டினை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே ஜியோனிசம் எல்லா விதமான அட்டூழியங்களில் ஈடுபட தொடங்கியது. அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக கூட்டுப்படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியன் வன்முறைகள், பயங்கரவாத தாக்குதல்கள், தூதுக்காக செல்பவர்களை கொலை செய்தல் போன்றவற்றின் மூலமாக ஒட்டுமொத்த அரேபியர்களை ஃபலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்ற சூழ்ச்சி எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது. இத்தகைய அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் பயங்கரவாத நாடான இஸ்ரேலை அமெரிக்காவும் அதனோடு கைகோர்த்துக்கொண்டிருக்கும் காலணி ஆதிக்க சக்திகளும் இஸ்ரேலுடைய செயல்பாட்டை கண்டிக்காமல் அதனை ஜனநாயகம் என்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்றும் பெருமை பேசி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் தான் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்து வருகிறது.

ஃபல்ஸ்தீனத்தில் வசித்து வரும் அரேபியர்களையும், வெள்ளையர்களையும் துரத்தியடிப்பதற்காக ஜியோனிஸ வெறியர்கள் முதன்முதலாக இர்குனாந்த் ஹக்னா என்ற தீவிரவாத‌ அமைப்பை தொடங்கினர். அரேபியர்களை வெளியேற்றுவதற்காக அவர்கள் வசிக்கும் கிராமங்களிலும், நகரங்களிலும் குண்டுகளை வெடிக்கச்செய்தனர்.


இர்குன் ஜியாய் லூமி மற்றும் ஸ்டெம் கங் போன்ற தீவிரவாத அமைப்புகளும் யூத படைகளுடன் இணைந்து அரேபியர்கள் வசித்த பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றினர். இதில்  பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1948 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று தயீர் யாசிரின் படுகொலை நடந்தது. ஜெருசலேம் அருகே 120 நபர்களை கொண்ட ஜியோனிஸ படையினர் தயீர் யாசரை கொன்றனர். 600கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் என 107 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர். அரேபியர்களின் வீடுகளுக்குள் கையெறி குண்டுகளை வீசியும் கொலை செய்தனர்.
 

1947 முதல் 1948 வரையிலான ஒருவருட காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம் அரேபிய ஃபல்ஸ்தீனர்களை அவர்களுடைய வீட்டை விட்டு வெளியேற்றி வலுக்கட்டாயமாக இஸ்ரேலிய எல்லையில் உள்ள‌ முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களுடைய இருப்பிடங்களுக்கு திரும்பிச்செல்லாதவாறு தடுக்கப்பட்டனர். இஸ்ரேல் என்று நாடு உருவாக்கப்பட்டவுடன் இத்தகைய தீவிரவாத அமைப்புகளில் செயல்பட்டவர்கள் அனைவரும் இஸ்ரேலிய இராணுவத்தில் இணைந்தனர்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். தீவிரவாதத்தை இஸ்ரேலே நடத்திவிட்டு சுதந்திரத்திற்காக போராடிவரும் ஃபலஸ்தீனர்களை பயங்கரவாதிகளாக உலக மக்களிடம் கூறி வருகிறது. சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்களில் இஸ்ரேல் தொடந்து ஈடுபட்டு வருகிறது. ஃபல்ஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடந்து கொண்டிருக்கிறது. கொலை செய்வது, துன்புறுத்துவது, மக்களை தன் சொந்த இடங்களை விட்டு வெளியேற்றுவது என தான் செய்து வரும் அனைத்து அட்டூழியங்களையும் மறைத்துவிட்டு தங்களுடைய விடுதலைக்காக போராடி வரும் ஃபலஸ்தீனர்களையும் பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து உலகிற்கு காட்டிவருகிறது இஸ்ரேல்.


 காஜா மற்றும் மேற்கு பகுதிகளை 1967ல் இஸ்ரேல் கைபற்றியது. அப்பகுதிகளை இன்று வரை திறந்த வெளி சிறைச்சலையாகவே இஸ்ரேல் பயன்படுத்திவருகிறது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் ஐரோப்பா கண்டத்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஃபலஸ்தீன பகுதிக்குள் குடி அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கென்று சகல வசதிகளையும் இஸ்ரேல் ஏற்படுத்திக்கொடுத்து வருகின்றது. இஸ்ரேல் தன்னை சுற்றி கட்டியிருக்கும் சுற்றுச்சுவர், சோதனை சாவடிகள், மின்சார வேலிகள் போன்றவற்றால் ஃபலஸ்தீனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்விக்கூடம், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சோதனை சாவடிகளில் வைத்தே இறந்திருக்கின்றனர்.

2008-2009 ஆண்டுகளில் காஜா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கொடுமையானதாகும். எல்லை மீறி பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் அப்பாவி மக்களை கொன்றனர். இஸ்ரேலிய இராணுவத்தினர் காஜா பகுதி மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினர். ஐம்பதனாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தனர். 80% மேற்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே உதவி செய்துகொள்ள முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்க்பட்டனர்.

உலக நாடுகளில் வெளி நாட்டு மண்ணில் இரகசிய நடவடிக்கைகளை நடத்திய நாடுகள் சிலவற்றில் இஸ்ரேலும் ஒன்றாகும்.

இஸ்ரேலை சுற்றி கட்டப்பட்டிருக்கும் சுற்றுச்சுவர்
  
 

மறைந்த முன்னால் இஸ்ரேலிய பேராசிரியரும், ஹோலோகாஸ்டின் போது உயிர்பிழைத்தவருமான ஷஹாக் கூறும்போது,

"இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது தன்னுடைய உளவு நிறுவனத்தை (மொஸாத்) பயன்படுத்தி வெளிநாட்டு மண்ணில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஃபலஸ்தீன தலைவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளை இஸ்ரேல் கொன்று வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்கள் ஃபலஸ்தீன், அரபு தேசத்தோடு நின்றுவிடவில்லை மாறாக தன்னுடைய கூட்டாளி நாடான அமெரிக்காவிலும் தனது தாக்குதலை நடத்திவருகிறது. 1954ல் அமெரிக்காவின் இராஜதந்திர மையங்கள் அமைந்திருக்கின்ற கெய்ரோவிலும், அலெக்ஸ்ஜான்டிரியாவிலும் இஸ்ல்ரேலின் ரகசிய நிறுவனம் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளது. இத்தாக்குதலை நடத்திய பிறகு இதன் பழியை எகிப்து மக்கள் மீது போட முயன்றது. ஈரான் மற்றும் எகிப்து நாட்டைச்சேர்ந்த 12ற்கும் மேற்பட்ட அணு விஞ்ஞானிகள் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்".

ஃபலஸ்தீனத்தை ஆதரித்த இந்தியா:

80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இஸ்ரேல் நாடு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தயவில் வளர்ந்து வருகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகள் இஸ்ரெலின் அட்டூழியங்களை வன்மையாக கண்டித்துள்ளன. 1948 ஆம் ஆண்டு ஐநா சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்யாசத்தில் ஃபலஸ்தீன் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஃபலஸ்தீன் தொடர்பான பிரச்சனையில் இந்தியா தனது நிலைபாட்டை தெளிவாக விளக்கியது. தேசப்பிதா மஹாத்மா காந்தி கூறும்போது "எவ்வாறு பிரிட்டன் பிரிட்டானியர்களுக்கும், பிரான்ஸ் பிரஞ்சுக்காரர்களுக்கு சொந்தமோ அதே போன்ற ஃபலஸ்தீன் அரேபியர்களுக்கே சொந்தம்" என்று கூறினார். ஃபலஸ்தீனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்த அரபு அல்லாத ஒரே தேசம் இந்தியாதான். 1980 வரை அணி சேரா நாடுகளின் தலைவராக இருந்த இந்தியா அரேபு தேசத்துடன் கைகோர்த்துக்கொண்டு ஐநா சபையில் ஃபலஸ்தீனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்தது.

1990களில் தாராளமயமாக்கள் கொள்கையினால் இந்தியா தனது நிலைபாட்டை சிறிது சிறிதாக மறக்கத்தொடங்கியது. 1991ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் முந்தையகால தலைவர்களின் நிலைபாட்டையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ள தொடங்கினார். அதன் பிறகுதான் இந்தியா இஸ்ரேலுடன் தன்னுடைய உறவை வலுப்படுத்தி ஆயுதங்கள் வாங்கத்துவங்கியது. இந்தியாவில் இருக்கும் ஆயுதங்களில் 50% மேற்பட்டவைகள் இஸ்ரேலிடமிருந்து வாங்கியது தான். அத்தோடு மட்டுமல்லாமல் இதற்காக கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு வருகிறது. எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்பதை இதுவரை அரசாங்கம் ரகசியமாக வைத்துள்ளது.

இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

இஸ்ரேலுடனான நட்புறவை இந்தியா அதிகப்படுத்தி வருவதால தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலின் உளவாளிகள் நமது நாட்டிற்குள் சுற்றித்திரிந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு இந்துத்துவ அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறது இஸ்ரேல். அத்தோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகளுக்கு மாற்றமாகவும் அதற்கு எதிராகவும் செயல்பட்டு தேசத்தை அமெரிக்காவிற்கு அடிபணியவைக்கும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஃபலஸ்தீனர்களை ஆதரிப்பவர்களையும், ஜியோனிஸத்தை எதிர்ப்பவர்களையும் தீவிரவாதிகளாக இன்றைய தேசிய ஊடகத்தின் மூலம் இஸ்ரேல் பிரச்சாரம் செய்து வருகிறது. இஸ்ரேலுடனான தனது புதிய உறவால் இத நாள் வரை அரபு தேசத்துடன் இருந்த நட்புறவை புறக்கணித்து வருகிறது இந்தியா. சமீபத்தில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளரான காஜ்மியின் விவகாரம் யூத பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய கார் குண்டுவெடிப்பில் ஈரானுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று இந்தியா ஒரு புறம் தெரிவித்திருந்தாலும் கைது செய்யப்பட்ட காஜ்மியை விசாரிப்பதற்கு இஸ்ரேலின் உளவு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்தியா. 

குண்டுவெடிப்புகளுக்கு மேல் குண்டுவெடிப்புகள்:

இந்தியா சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று  உள்நாட்டு பாதுகாப்பு தான். கைது செய்யப்பட்ட முன்னால் இராணுவ அதிகாரி கர்னல் புரோஹித்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆடியோ டேப்புகளின் படி அவர் நடத்திய குண்டுவெடிப்பு சதிச்செயல்களுக்கு இஸ்ரேலிடம் இருந்து உதவி பெற்றது தெளிவாகியது. இஸ்ரேலுடனான உறவை அதிகப்படுதியதால் தான் இந்தியாவில் குண்டுவெடிப்பு  சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன என்பது உறுதியாகியுள்ளது. இஸ்ரேலின் மாஃபியா கும்பல்கள் இந்தியாவில் ஊடுறுவி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இப்பேற்பட்ட சூழ்நிலையில் இஸ்ரேலுடனான தனது உறவை இந்தியா மேலும் அதிகப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. நல்லிணக்கம், நீதி, சுதந்திரத்தை விரும்பும் இந்தியா போன்ற நாடுகள் ஃபலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் உறவை மேற்கொள்வது ஆபத்தானதாகும். இந்தியா மீண்டும் தனது அணி சேரா கொள்கைக்கு திரும்ப வேண்டும்.

ஜியோனிஸ திட்டத்தை முறியடிக்க வேண்டும்:

காலணி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஜியோனிஸ கொள்கைக்கு எதிராகவும் போராடி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது பிற நாடுகளை அச்சுறுத்தி வளந்து வரும் இஸ்ரேலை கண்டித்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இப்பிரச்சாரம் மக்கள் மத்தியில் இந்தியாவிற்கு இஸ்ரேலால் எவ்வகையில் அச்சுறுத்தல் இருக்கின்றது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பிரச்சாரம் அமையும்.


பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு கை கோருங்கள்!

0 comments:

Post a Comment