Monday, January 28, 2013

அதிரையில் ஷஹீத் பழனிபாபா நினைவு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்!

வருகின்ற 31.01.2013 அன்று மாலை 6.45 மணியளவில் அதிரை SDPI கட்சி சார்பில் ஷஹீத் பழனிபாபா நினைவு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் ஷஹீத் பழனிபாபா அரங்கில் நடைப்பெற உள்ளது. ...

Wednesday, January 23, 2013

தீவிரவாத வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவ, சிறையில் இருந்து விடுதலையானவர் அமைப்பை துவக்கினார்!

23 Jan 2013 புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் பொய் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார். 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) கைது செய்த யுனானி மருத்துவரான சல்மான் ஃபார்ஸி இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஏ.டி.எஸ்...

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும்! – போலீஸ் கமிஷனரிடம் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் மனு!

23 Jan 2013 சென்னை:நடிகர் கமலஹாசன் தயாரித்து, நடித்து வெளியாக உள்ள ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.இந்த படத்தில் ட்ரெய்லர் காட்சிகள் வெளிவந்தவுடனேயே முஸ்லிம்களுக்கு எதிரான படம் என கருத்து வெளியானது. அப்போதே இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாக இணைந்து படத்தை எங்களுக்கு முதலில் திரையிட்டு காட்டியபின்பே வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினர்....

Wednesday, January 16, 2013

பிப்ரவரி 17 - பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்சிகள் மற்றும் மூன்று இடங்களில் யூனிட்டி மார்ச்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கடந்த ஜனவரி 10ம் தேதி மதுரையில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்கினார் . பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார் . அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம்: பிப்ரவரி 17 ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும் என்ற தேசிய செயற்குழுவின் தீர்மானதின்படி அகில இந்திய...

மத வெறியர்களால் தாக்கப்பட்ட பள்ளி இமாம் (புகைபடங்கள்)

பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள்  கடந்த சனிகிழமை இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கும்போது பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிளான 15 கொண்ட ரவுடி கும்பலால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் பள்ளி இமாம் மற்றும் தடுக்க சென்ற நகர SDPI தலைவர் அமான்னுல்லாஹ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். தாக்கப்பட்ட பள்ளி இமாம் நகர SDPI...

Tuesday, January 15, 2013

விஸ்வரூபம் கண்டிப்பாக திரையிட்டுக் காட்டப்படும் - இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்களிடம் கமலஹாசன் உறுதி

அண்மையில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காட்சிகள் அமைக்கபட்டு இருந்தது . அதனை தொடர்ந்து துப்பாக்கி பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்கினர்.  இதற்கு பிறகு விஸ்வரூபம் படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக அணுகி வருகிறது ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை...

அதிரை நகர முஸ்லிம் லீக்கின் பொதுக்கூட்டம்!

அதிரையில் இன்று மாலை இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் மர்ஹூம் N.A.ஜெக்கரியா நினைவரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கை பரப்பு செயலாளர் ஜனாப்.காயல் மஹபூப் மற்றும் MSF-ன் மாநில செயலாளர் V.A. செய்யது பட்டானி (மாநில செயலாளர் முஸ்லிம் மாணவர் பேரவை) ஆகிவோர் சிறப்புரையாற்றினர். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். Photos By : S.Abdul Wahab...

Monday, January 14, 2013

பட்டுக்கோட்டையில் மத கலவரத்தை தூண்ட முயற்ச்சி!(புகைப்படங்கள்)

நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த இமாம் அவர்களுடைய...

Sunday, January 13, 2013

அதிரையில் களத்தில் இறங்கிய SDTU!

அதிரையில் தன் சேவையை தொடங்கியது SDTU என்னும் தொழிலாளர்களுக்கான தேசிய இயக்கம். இதில் ஒரு பகுதியாக நேற்று முந்தினம் ஆட்டோவில் பயணித்த ஒருவர் தன்னிடம் இருந்த பாஸ்புக் போன்ற முக்கிய ஆவணங்களை ஆட்டோவில் தவரவிட அதை பார்த்த டிரைவர் SDTU-வின் அமைப்பாளர் ஹிதாயதுல்லாஹ் அவர்களின் மூலம் இதை உரியவர்களிடம் சேர்க்கும் முயர்ச்சியில் இறங்கினர். பின் நேற்று மாலை தஞ்சை தெற்கு மாவட்ட SDPI அலுவலகத்தில் வைத்து பாஸ்புக் போன்ற ஆவணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது. அப்போது...

Friday, January 11, 2013

அமீரக AAMF–ன் மாதந்திர செயற்குழு கூட்டம் (Photos)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்] இடம்: செயளாலர் V.T.அஜ்மல் ROOM  தேதி: 10-01-2013 அமீரக AAMF–ன்  மாதந்திர செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது. அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :     1)  செயற்குழுக்கூட்டத்தில் காலண்டர் விஷயமாக விவாதிக்கப்பட்டு ஒவ்வொரு முஹல்லாவுக்கும் உள்ள பங்கிட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றி அறிவிக்கப்பட்டது. 2)  அமீரக...

Wednesday, January 9, 2013

த த ஜமாத்துக்கு ''அல்வாவை'' [கிண்டி] கொடுத்த அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!! வன்மையாக கண்டிக்கின்றோம்!!! அண்ணன் ஜமாத்துக்கு ''அல்வாவை'' [கிண்டி] கொடுத்த அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!! இஸ்லாமிய மார்க்க நோட்டீஸ் கொடுத்ததற்காக நடு இரவில் வீடு புகுந்து பெண்களை தரைக்குறைவாக பேசிய காவல்துறையையும்- அந்த அநீதியை கேட்க்க சென்ற அப்பாவி த த ஜ சகோதரர்கள் மீது தடி அடி ''தர்ம'' அடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் அதை தொடர்ந்து மண்ணடியில் த த ஜ பொதுக்கூட்டம் நடத்தி அதிகாரத்தை தவறாக...

Tuesday, January 8, 2013

முதலாம் பரிசு தொகையை தட்டிச்சென்ற திரு.லோகநாதன் மற்றும் K.சலாவுதீன் அவர்களின் புகைபடங்கள்!

அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதலாம் பரிசு தொகையான ரூ.11,111-யை தட்டிச்சென்ற கல்லூரி மாணவர் திரு.லோகநாதன் மற்றும் இப்போட்டியில் 12-ஆம் இடமும்  அதிரையர் சார்பில் முதலாம் இடமும் ரூ.500 சிறப்பு பரிசு தொகை பெற்ற K.சலாவுதீன்( வயது 17) அவர்களின் புகைபடங்கள் இதோ உங்கள் பார்வைக்கு. திரு.லோகநாதன் சென்றமுறையும் முதலாம் இடம் பெற்றது குறிப்பிடதக்கது. கோப்பையை கைப்பற்றிய திரு.லோகநாதன் ரூ.500...

தஞ்சையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்!

தொடரும் விவசாயிகள் தற்கொலை, தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும். SDPI கட்சி-யின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் தஞ்சையில் 09/01/2013 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெரும் மாபெரும் இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) தஞ்சை தெற்கு மாவட...

Sunday, January 6, 2013

அதிரையை மட்டுமல்ல தமிழகத்தையே அதிரவைத்த நெடுந்தூர ஓட்டப்போட்டி! (புகைபடங்கள்)

இன்று அதிகாலை அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவினர் அதிரை காவல் துறையுடன் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர்.  பல தரப்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட  இந்த போட்டியின் எல்லை அதிரை பேருந்து நிலையத்திலிருந்து கொள்ளுக்காடு வரை...

Saturday, January 5, 2013

ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!

                      ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!      அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் ! இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள்...

கூடங்குளம்:அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகும் எதிர்ப்புக் குழு!

4 Jan 2013        இடிந்தகரை:கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி துறை தலைவர் ரத்தன்குமார் சின்ஹா கூறிய நிலையில் அணு உலைக்கு எதிரான இறுதிகட்ட போராட்டம் குறித்து வருகிற 13 ஆம் தேதியன்று முடிவெடுக்கப்படும் என்று அணு உலை எதிர்ப்புக் குழு அறிவித்துள்ளது.        இன்னும் இரு வாரங்களில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும்...

சிவசேனை கட்சியின் அங்கீகாரம் "ரத்து" வழக்கு : தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

     Jan5, சிவசேனை மற்றும் "மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா" (M.N.S) ஆகிய வகுப்புவாத கட்சிகளுக்கு உள்ள "அரசியல் கட்சி" என்ற அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.      இவ்விரு கட்சிகளும், தேசிய நலனுக்கு எதிராக செயல்படுகின்றன.      இக்கட்சிகளுக்குள்ள "அரசியல் கட்சி" என்ற அந்தஸ்தையே ரத்து செய்யவேண்டும், என சமூக ஆர்வலர்...

பிரவீன் தொகாடியாவுக்கு எதிரான புகார் : நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது!

     Jan4, ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றி "மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்" என முஸ்லிம்களை மிரட்டும் வகையில், பகிரங்கமாக பேட்டியளித்த விசுவ ஹிந்து பரிஷத்தின் "பிரவீன் தொகாடியா"வுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.      சார்மினாரில் கோவில் கட்டுவதை எதிர்த்தால்? "ஹைதராபாத்தை அயோத்தி"யாக மாற்றி முஸ்லிம்களுக்கு "மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்" என, கடந்த டிசம்பர் மாதம் பேட்டியளித்த...

பர்தாவுக்கு ஆதரவு : பெல்ஜியம் கோர்ட்டில் தீர்ப்பு!

     Jan4, பெல்ஜியமை சேர்ந்த முஸ்லிம் பெண் "பர்தா" அணிந்து வேலை செய்ததால் "பணி நீக்கம்" செய்யப்பட்ட வழக்கில், ஹிஜாபுக்கு ஆதரவாக பெல்ஜியம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்துக்கும் சம்பளம் வழங்கவுஉத்தரவிட்டதும்.      பெல்ஜியமில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், பணிபுரிந்து வந்த 27 வயது முஸ்லிம் பெண், பர்தா அணிந்து வேலைக்கு வந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.     ...

Friday, January 4, 2013

கிருஷ்ணகிரி : மாணவிகளுக்கு "தற்காப்பு" பயிற்சி!

   Jan4, பாலியல் தொல்லைகளை விட்டு தப்பிக்க, மாணவிகளுக்கு கராத்தே-குங்க்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மை பிரிவு துணைத்தலைவரும், கட்சி சார்பில் "வேட்பாளராக அறிவிக்கப்பட்டும்" போட்டியிட மறுத்துவிட்டவருமான "ஹசீனா சையத்" தெரிவித்தார்.      அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.      மேலும், குற்றங்களை...

எல்லாம் அவன் செயல் : குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்ற பர்வேஸ் ரசூல் "கிரிக்கெட்" டீமுக்கு தேர்வு!

    Jan3, மூன்றாண்டுகளுக்கு முன் பெங்களூரு "சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு" வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" அதே ஸ்டேடியத்தில் நட்சத்திர வீரராக வளம் வரவிருக்கிறார்.      குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" தற்போது, இந்தியா "A" கிரிக்கெட் டீமுக்கு தேர்வாகியுள்ளார். காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் டீமில் இடம்...

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு!

    4 Jan 2013                சென்னை:முஸ்லிம் தலைவர்களிடம் படத்தை திரையிட்டு காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.        இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .முஹம்மது ஹனீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;     ...

சட்டவிரோத மருந்து பரிசோதனை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

4 Jan 2013        டெல்லி:மனிதர்களிடம் நடத்தப்படும் சட்டவிரோத மருந்து பரிசோதனைகளை தடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.        புதிதாக தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளை நாடு முழுவதும் பல மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றை...