
சென்னை, அக்.31: சென்னை, தி.நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு மாதம் முன்னரே அறிவிப்பும் கொடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் இல்லாத சூழ்நிலையில், கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்றம் இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை கண்டித்தது.
இந்நிலையில், இன்று காலை...