Sunday, October 9, 2011

பாகிஸ்தானில் பத்திரிகை நிருபர் படுகொலை.


பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஜோஹர் நகரைச் சேர்ந்தவர் பைசல் குரேஷி (28). இவர் லாகூரில் இருந்து வெளியாகும் தி லண்டன் போஸ்ட் என்ற பத்திரிகையின் தலைமை நிருபராக இருந்தார். இவர் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

மேலும் அவரது உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கிடந்தது. இந்த கொலையை செய்தது யார்? என தெரிய வில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தாகிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்டாப் உசேன் குறித்து தி லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் போஸ்ட் குரேஷி கட்டுரை எழுதி இருந்தார். இதை தொடர்ந்து அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார். எனவே அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் பைசலை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

0 comments:

Post a Comment