
இதர்க்கு காரணம் நமதூரில் ஒற்றுமை இல்லை.இந்த நிலை மாற வேண்டுமா? அதிரையில் உள்ள ஏழு சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று பட வேண்டும்! அது மட்டுமல்ல இளைஞர்கள் ஒன்று பட வேண்டும்! இதர்க்கான முயற்சிகளில் நாம் அனைவரும் ஈடு படுவோம் இன்ஷா அல்லாஹ்.
இது மட்டும் நடந்தால் நமதூரில் உள்ள சுகாதர சீர்கேடு மற்றும் பல குரைகள் தீரும்.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள்.அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 3:103)
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

0 comments:
Post a Comment